புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகளுக்கு ஆணையர்களை நியமித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை நகராட்சி நிர்வாக அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. பானுமதி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார்.
கோட்டக்குப்பம் நகராட்சியின் முதல் ஆணையர் திருமதி.பானுமதி அவர்களின் பணி சிறக்க கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.