April 8, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்.

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய ஆணையராக திரு. மங்கையர்கரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வந்தவாசி நகராட்சியின் ஆணையராக பொறுப்பு வகித்தவர்.

கோட்டக்குப்பம் நகராட்சியின் முன்னாள் ஆணையர் திரு. பானுமதி அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணையருக்கு, கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் திரு எஸ் எஸ் ஜெயமூர்த்தி அவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அலுவலக ஊழியர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அமைப்புகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புதிய ஆணையருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 15 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

கோட்டக்குப்பதில் நாளை 22-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment