April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை மாணவரணி சார்பாக கோட்டக்குப்பம் பரகத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மாவட்டத் தலைவர் சல்மான் பார்ஃசி அவர்கள் தலைமையில் இன்று (24-12-2023) பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர் கொள்வது எப்படி, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, எவ்வாறு எளிய முறையில் மனனம் செய்வது என்ற முறைகளை கல்வியாளர்கள் அஷ்ரப் அலி, முஹம்மத் ஆசாத் ஆகியோர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர் அணி செயலாளர் உசேன் அவர்கள் நன்றி உரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வணிகர் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி & நலத்திட்ட உதவி

டைம்ஸ் குழு

அனைவருக்கும் எங்களின் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!

டைம்ஸ் குழு

கிஸ்வா மற்றும் பிம்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

டைம்ஸ் குழு

Leave a Comment