April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நோன்பு பெருநாள்.  [புகைப்படங்கள்]

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஈகைப் பெருநாள் தொழுகை சரியாக இன்று(11/04/2024) காலை 7:30 மணிக்கு ஈத்காவில் நடைப்பெற்றது. ஜமாத்தார்கள் அனைவரும் சரியாக காலை 6:45 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகில் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான ஜமாத்தார்கள் ஈத்கா மைதானம் நோக்கி சென்றனர்.

பிறகு, ஈத்கா மைதானத்தில் மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் “வாக்குரிமை அவசியத்தையும் மற்றும் ஒற்றுமைத்துவத்தை” பற்றி சிறப்பு பயான் செய்தார். அதன்பின், நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும், அனைவரின் நல்வாழ்வுக்காகவும், நலனுக்காகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் துஆ(பிரார்த்தனை) செய்யப்பட்டது. பிறகு, ஒருவருக்கொருவர் தங்களின் பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…

Leave a Comment