April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் உதவியுடன் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

கோட்டக்குப்பத்தில் கொரானா தடுப்பூசி முகாம்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

அதன்படி, கோட்டக்குப்பம் பரகத் நகர் பகுதியில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுகாதாரத்துறை ஆய்வாளர் ரவி அவர்கள் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா பள்ளிவாசல் வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22-06-2021) முகாம் அமைத்து கொடுத்தார்கள். அதன்படி, பொது அறிவிப்பு செய்யப்பட்டதில் பரகத் நகர் மற்றும் அருகிலுள்ள பொது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி(கோவிஷீல்டு) செலுத்திக் கொள்ள வந்தார்கள். அதன்படி, காலையிலேயே வந்துவிட்ட மக்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு 10:30 மணி அளவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதிகப்படியான, மக்கள் வருகை தந்ததால் மீண்டும் மருந்து வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடா விருப்பப்பட்டவர்கள் அனைவருக்கும் ஊசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திமுக பிரமுகர் ஜெயமூர்த்தி அவர்கள் வருகை தந்து பார்வையிட்டார்கள். இந்த சிறப்பு முகாமில் சுகாதாரத்துறை ரவி அவர்கள் முன்னிலையில், பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் 170-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை அறிவிப்பு..

நன்றி அறிவிப்பு!

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

Leave a Comment