April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு.

கடந்த 30 ஆண்டு காலமாக கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றம் அலுவலகம் எதிரில் இயங்கி வந்த காவல் நிலையம் பழுதடைந்தது அடுத்து, அதனை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டுமானம் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வந்த நிலையில், தற்பொழுது கட்டுமானப் பணிகள் முழுவதும் முடிந்து தயார் நிலையில் உள்ளது.

இதன் திறப்பு விழா நாளை 30.08/2021(திங்கட்கிழமை) காலை 9:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா அவர்கள் திறந்து வைக்க உள்ளார்கள். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளை கோட்டக்குப்பம் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது..

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 78-வது சுதந்திர தின விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment