April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் பணியிடம் மாற்றம். சேவையை பாராட்டி முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து.

கடந்த மூன்று வருடங்களாக கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.சரவணன் அவர்கள் பணியிடை மாற்றம் பெற்று வேறு இடம் செல்வதாக அறிவிப்பு செய்துள்ளார்கள்.

கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாக பணியாற்றியதற்கும், கொரானா காலத்தில் தன்னார்வர்களுடன் குழு அமைத்து, அரசு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் முன்னெடுத்து கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவர பெரும் பங்காற்றியதற்கும், பல பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் வண்ணம் செயலாற்றியதற்கும், கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுவினர்கள், வணிகர் சங்க பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

Leave a Comment