29 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவன், அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி, குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் சக்திவேல்,15; இவர், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயில்கிறார்.

இவர், நேற்று மாலை 3.00 மணிக்கு, கோட்டக்குப்பம் அருகேவுள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில், தனது உறவினர்கள் விஷ்வா, சந்துரு, அரிஷ்குமார் ஆகியோரோடு குளிக்கசென்றார். திடீரென கடல் அலையில் சிக்கிய சக்திவேலை, அரிஷ்குமார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவரை பரிசோதித்த செய்த டாக்டர்கள் சக்திவேல் இறந்ததை உறுதிபடுத்தியுள்ளனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி.

கோட்டக்குப்பத்தில் யாருக்கேனும் சளி, ஜுரம், இருமல் இருந்தால் உடனே தெரியப்படுத்தவும் – சுகாதாரத்துறை ரவி அவர்கள் அறிவுரை.

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான புதிய அலுவலகம் கட்டிடம் கருத்தகாட்டு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் கட்ட பெறுவாரியான கவுன்சிலர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment