April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

தமிழகம் முழுதும் நாளை(ஜூலை 10), ஒரு லட்சம் இடங்களில், 31வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.

அதன்படி, கோட்டக்குப்பதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – 10/07/2022) 10 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம், காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம்.
  2. அங்கன்வாடி மையம், பரகத் நகர்
  3. அங்கன்வாடி மையம், நடுக்குப்பம்
  4. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  5. அங்கன்வாடி மையம், கோட்டமேடு.
  6. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  7. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  8. அங்கன்வாடி மையம், சின்ன முதலியார் சாவடி குப்பம்
  9. அங்கன்வாடி மையம், பெரிய முதலியார் சாவடி.
  10. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு

திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் சீரான குடிநீர் வினியோகம் பெற அல்லல்படும் மக்கள். பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை முறையிட்டும் சரி செய்யாத உள்ளூர் நிர்வாகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக்கின் விளக்க குறும்படம்..

வெளிநாடுகளில் வசிக்கும் நமது கோட்டகுப்பம் நண்பா்கள் ஈத் பெருநாள் தொழுகை காட்சிகள்

Leave a Comment