April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கலைஞர் நினைவு தினம்: கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இன்று (07/08/2023) முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் மு கருநணாநிதியின் 5-வது நினைவு தினம் இன்று. இதனை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகராட்சி, சின்ன கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் இன்று திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் 14-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M.ஸ்டாலின் சுகுமார் ஏற்பாட்டில் கோட்டக்குப்பம் திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், 14-வது வார்டு தி.மு.கழகத்தை சார்ந்த 3 குடும்பத்திற்கு தலா ரூ. 2500 ரூபாய் விதம், மொத்தம் 7500 ரூபாய் மற்றும் தூய்மை பணியாளர்கள் 2 நபர்களுக்கு தலா ரூ. 500 ரூபாய் விதம், மொத்தம் 1000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு கோட்டக்குப்பம் நகர திமுகவினர் மற்றும் 14-வது வார்டு திமுகவினர் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை.

டைம்ஸ் குழு

கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கோட்டகுப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஹிஜாப் தடையை கண்டித்து கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment